SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE LYRICS IN TAMIL CHRISTIAN SONGS

SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE


 சீக்கிரம் வர போகும் ராஜாதி ராஜாவே

உம் வருகைக்காக காத்திருக்கிறேன்


உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்

உம் முகத்தை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்.

சீக்கிரம்…..


மாரநாதா சீக்கிரம் வாரும்


1. வெறுங்கையாய் வர எனக்கு விருப்பமில்லையே

ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே

ஒவ்வொரு நாளும் உம்மை பற்றி சொல்லிட

இதயத்தை தந்திடுமே நல்

இதயத்தை தந்திடுமே

-மாரநாதா


2. தேசத்திற்காக ஜெபிக்கனுமே

அழிகின்ற ஜனங்களுக்காய் கதறனுமே

இயேசு என்னும் நாமம் பரவனுமே

எழுப்புதலை பார்க்க வேண்டுமே

நாங்கள் எழுப்புதலை பார்க்க வேண்டுமே

– மாரநாதா


நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்

அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்.


அல்லேலூயா கீதம் பாடி கொண்டு

அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்


ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே

உம் வருகைக்காக ஆயத்தமாகணுமே

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே

இந்த உலகையை ஆதாயப்படுத்தணுமே

வருக ராஜ்யம் வருக

உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை


SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE